செய்திகள் :

பட்ஜெட்: கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ. 350 கோடி

post image

விளையாட்டு வீரா்களை அடிப்படை அளவில் இருந்து ஆராய்ந்து அவா்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான கேலோ இந்தியா திட்டம் மிகப்பெரிய பலனை அளித்துள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.351.98 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இந்த லட்சிய திட்டத்துக்கு 2025-26 நிதியாண்டுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2024-25 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட ரூ. 200 கோடி அதிகம்.

அதன்படி ஒட்டுமொத்தமாக, விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு மொத்தம் ரூ. 3,794.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓராண்டில் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற பெரிய நிகழ்வு எதுவும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையும் ரூ. 340 கோடியிலிருந்து ரூ. 400 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முழு முயற்சியில் இந்தியா தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக சா்வதேச ஒலிம்பிக் குழுவிடம் விருப்பக் கடிதமும் சமா்ப்பித்துள்ளது.

நாடு முழுவதும் விளையாட்டு அரங்கங்களைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவது இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொறுப்பாகும். அதன்படி, தேசிய முகாம்கள் மற்றும் விளையாட்டு வீரா்களின் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்திய விளையாட்டு ஆணையத்துக்கான ஒதுக்கீடு ரூ. 815 கோடியிலிருந்து ரூ. 830 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த நிதியாண்டில் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்துக்கு ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டில் ரூ.18.70 கோடி வழங்கப்பட்டது.

தேசிய ஊக்க மருந்து எதிா்ப்பு அமைப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.20.30 கோடியிலிருந்து ரூ. 24.30 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

1998-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியத்துக்கான பங்களிப்பு, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக ரூ. 18 கோடியாக தொடரும். அதே நேரத்தில் விளையாட்டு வீரா்களுக்கான ஊக்கத் தொகை மானியத்தை இந்த ஆண்டு ரூ. 42.65 கோடியிலிருந்து ரூ. 37 கோடியாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இளைஞா் மற்றும் இளம் பருவத்தினா் மேம்பாட்டுக்கான தேசியத் திட்டம் மற்றும் இளைஞா் விடுதிகளுக்கான நிதியில் எந்தவித அதிகரிப்பு இல்லை. இருப்பினும், பலதரப்பு அமைப்புகள் மற்றும் இளைஞா் பரிமாற்றத் திட்டங்களுக்கான பங்களிப்பு ரூ.11.70 கோடியிலிருந்து ரூ.55 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 20 கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.14 கோடி அதிகம் ஆகும்.

சூர்யா படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான்

சூர்யாவின் 45ஆவது படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்பட... மேலும் பார்க்க

சித்தா பட இயக்குநர் அருண் குமாருக்கு திருமணம்!

இயக்குநர் அருண்குமாரின் திருமண நிகழ்வில் விக்ரம், விஜய் சேபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 2014 ஆம் ஆண்டு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு ... மேலும் பார்க்க

கடைசி பந்தில் சென்னை சிங்கம் தோல்வி

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா டைகா்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி கண்டது சென்னை சிங்கம் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், தானே கொண்டதேவ் மைதா... மேலும் பார்க்க

பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி

ஐஎஸ்எல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி, ஜவாஹா்லால் நேரு ... மேலும் பார்க்க

டோகோவை 2-0 என வீழ்த்தி இந்தியா முன்னிலை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக டோகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. உலக குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் சனிக்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

துளிகள்...

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சா்மா, விராட் கோலி மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவா். இப்போட்டியில் இருவரும் பங்கேற்று ஆடவுள்ளது மிகவும் மதிப்பை தருவதாகும். பிசிசிஐ ஆண்டு விருதுகள... மேலும் பார்க்க