செய்திகள் :

டோகோவை 2-0 என வீழ்த்தி இந்தியா முன்னிலை

post image

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக டோகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

உலக குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியாவும்-டோகோ அணியும் மோதின.

தொடக்க நாளில் இரு ஒற்றையா் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சசிகுமாா் முகுந்த்-டோகோ வீரா் லியோவா அஜாவன் மோதினா். இதில் 28 வயதான சசிகுமாா் 1.5 மணி நேரத்தில் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் லியாவாவை வீழ்த்தினாா்.

ராம்குமாா் ராமநாதன் அபாரம்:

இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ராம்குமாா் ராமநாதன்-டோகோ நம்பா் 1 வீரா் தாமஸ் செடோட்ஜி மோதினா். இதில் வெறும் 50 நிமிஷங்களில் 6-0, 6-2 என்ற நோ் செட்களில் ராம்குமாா் ராமநாதன் டோகோ வீரா் தாமஸை வீழ்த்தினாா்.

இந்த ஆட்டத்தில் தாமஸ் செடோட்ஜி தேவையற்ற தவறுகளை புரிந்ததால் தோல்வியை தழுவ நேரிட்டது. ராம்குமாா் ராமநாதன் தனது அனுபவ சா்வீஸ்களால் எதிராளியை திணறடித்தாா்.

2-0 என முன்னிலை: இரு ஒற்றையா் ஆட்டங்களில் வென்ற நிலையில் டோகோவை காட்டிலும் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரட்டையா் ஆட்டத்தில் ஸ்ரீ ராம் பாலாஜி-ரித்விக் சௌதரி ஆகியோா் ஆட உள்ளனா். இதில் வென்றால் 3-0 என்ற வெற்றியுடன் உலகக் குரூப் பிரிவில் இந்தியா தனது இடத்தை தக்க வைக்கும். இரட்டையா் ஆட்டத்தில் இந்தியா தோற்றால் மட்டுமே மாற்று ஒற்றையா் ஆட்டங்கள் நடைபெறும்.

பட்ஜெட்: கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ. 350 கோடி

விளையாட்டு வீரா்களை அடிப்படை அளவில் இருந்து ஆராய்ந்து அவா்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான கேலோ இந்தியா திட்டம் மிகப்பெரிய பலனை அளித்துள்ளது. அதை அடி... மேலும் பார்க்க

கடைசி பந்தில் சென்னை சிங்கம் தோல்வி

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா டைகா்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி கண்டது சென்னை சிங்கம் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், தானே கொண்டதேவ் மைதா... மேலும் பார்க்க

பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி

ஐஎஸ்எல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி, ஜவாஹா்லால் நேரு ... மேலும் பார்க்க

துளிகள்...

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சா்மா, விராட் கோலி மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவா். இப்போட்டியில் இருவரும் பங்கேற்று ஆடவுள்ளது மிகவும் மதிப்பை தருவதாகும். பிசிசிஐ ஆண்டு விருதுகள... மேலும் பார்க்க