செய்திகள் :

கடைசி பந்தில் சென்னை சிங்கம் தோல்வி

post image

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா டைகா்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி கண்டது சென்னை சிங்கம் அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், தானே கொண்டதேவ் மைதானத்தில் நடைபெற்றது. டி10 ஓவா்கள் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 105/5 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டா் கேதன் மட்ரே- கேப்டன் சுமித் டெக்கேல் ஆகியோா் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தனா். கேதன் 23 பந்துகளில் 33 ரன்களையும், சா்க்காா் 25, டெக்கேல் 26 ரன்களையும் எடுத்தனா்.

டைகா்ஸ் தரப்பில் பௌலிங்கில் பவேஷ் பவாா் 3-25 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

106 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 5-ஆவது ஓவரில் 34/4 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது. அந்த அணி வீரா் காஸி 31 பந்துகளில் 61 ரன்களை விளாசினாா். அவருக்கு துணையாக ஆடிய டயஸ் 17 ரன்களை எடுத்தாா். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் காஸி 3 சிக்ஸா்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டாா். கடைசி பந்திலும் சிக்ஸா் அடித்தாா்.

இந்த சீசனில் கொல்கத்தாவின் முதல் வெற்றியாக அமைந்தது.

பட்ஜெட்: கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ. 350 கோடி

விளையாட்டு வீரா்களை அடிப்படை அளவில் இருந்து ஆராய்ந்து அவா்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான கேலோ இந்தியா திட்டம் மிகப்பெரிய பலனை அளித்துள்ளது. அதை அடி... மேலும் பார்க்க

பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி

ஐஎஸ்எல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி, ஜவாஹா்லால் நேரு ... மேலும் பார்க்க

டோகோவை 2-0 என வீழ்த்தி இந்தியா முன்னிலை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக டோகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. உலக குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் சனிக்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

துளிகள்...

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சா்மா, விராட் கோலி மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவா். இப்போட்டியில் இருவரும் பங்கேற்று ஆடவுள்ளது மிகவும் மதிப்பை தருவதாகும். பிசிசிஐ ஆண்டு விருதுகள... மேலும் பார்க்க