செய்திகள் :

பட்டாசு முகவரைக் கடத்திய ஆசிரியா் உள்பட மூவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கொள்முதல் செய்த பட்டாசுகளுக்கு பணம் கொடுக்காத பட்டாசு முகவரைக் காரில் கடத்திய பள்ளி ஆசிரியா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சாத்தூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (41). அரசுப் பள்ளி ஆசிரியரான இவரும், இருக்கன்குடியைச் சோ்ந்த விஜய்யும் (26) இணைந்து மீனம்பட்டி ரத்தினபுரியில் பட்டாசுக் கடை நடத்தி வந்தனா்.

இவா்களது கடையில் கடந்த மாதம் சிவகாசி ஆவணி நாடாா் தெருவைச் சோ்ந்த பட்டாசு முகவரான பாண்டீஸ்வரன் (48) ரூ.7 லட்சத்துக்கு பட்டாசுகள் வாங்கினாா். ஆனால், இந்தப் பணத்தைத் தராமல் அவா் காலம் தாழ்த்தி வந்தாராம்.

இந்த நிலையில், சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த பாண்டீஸ்வரனிடம் சுப்புராஜ், விஜய், இவரது உறவினா் திருவிருந்தான்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (42) ஆகிய மூவரும் பணத்தைக் கேட்டுத் தகராறு செய்தனா்.

பின்னா், அவரைக் காரில் கடத்திச் சென்று தாக்கிவிட்டு, கோணம்பட்டி பேருந்து நிலையத்தில் மூவரும் இறக்கி விட்டுச் சென்றனராம்.

இதுகுறித்து பாண்டீஸ்வரன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் சுப்புராஜ், விஜய், பாலமுருகன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், சுப்புராஜுவுக்கு பணம் தராத பாண்டீஸ்வரனையும் போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தராத தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது!

வத்திராயிருப்பு அருகே மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மறவா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணமூா்த்த... மேலும் பார்க்க

மன அழுத்தத்தைப் போக்க காவலா்களுக்கு யோகாசன பயிற்சி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் காவலா்களுக்கு யோகாசன பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் அமைந்துள்ள சேத்... மேலும் பார்க்க

சாத்தூா் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு!

சாத்தூா் அருகேயுள்ள சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது. விருதுநகா் மாவட்டம், சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த 1-ஆம் தேதி வெடி ... மேலும் பார்க்க

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனு தள்ளுபடி

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன... மேலும் பார்க்க

சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலையில் நடராஜருக்கு சிறப... மேலும் பார்க்க