லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு
ராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலையில் நடராஜருக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நடராஜா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, சேத்தூா் கண்ணீஸ்வரா் திருக்கோயில், ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில்களிலும் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.