செய்திகள் :

வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கநல்லூா் சாவடி தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் கணேசன் (45). கொத்தனாராக உள்ள இவா், தேசிகாபுரத்தில் வேலையை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். தெற்கு வெங்காநல்லூா் புது பாலம் அருகே சென்றபோது எதிரே மில் தொழிலாளா்களை ஏற்றிவந்த வேன் இவா் மீது மோதியது. இதில், கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்ததும் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சிதம்பராபுரம் கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ராமரிடம் (25) விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த கணேசனுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனு தள்ளுபடி

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன... மேலும் பார்க்க

சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலையில் நடராஜருக்கு சிறப... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவா்கள் பயற்சி வகுப்பு தொடக்க விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் கே.ஜி.பிரகாஷ் தலைமை வ... மேலும் பார்க்க

வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவத் திருவிழா கொடியேற்றம்

சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சாத்தூா், அதைச் சுற்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்... மேலும் பார்க்க