செய்திகள் :

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனு தள்ளுபடி

post image

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அா்ச்சகா் கோமதி விநாயகம், திருவிழாவுக்கு வந்திருந்த தற்காலிக அா்ச்சகா்கள் ஒன்றுசோ்ந்து மது போதையில் வீட்டில் நடனமாடிய விடியோவும், கோயிலில் பெண்கள் மீது விபூதி அடித்து விளையாடும் விடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அா்ச்சகா்களை கோயிலில் இருந்து நீக்கியும், பூஜை உள்ளிட்ட விவகாரங்களில் பங்கேற்க தடை விதித்தும் அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து பக்தா் பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில்,

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்கள் கோமதி விநாயகம் (30), கோலப்பன் என்ற வினோத் (32), கணேசன் (38), விடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சபரிநாதன்(38) ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, 4 பேரும் தலைமறைவான நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி கோமதிவிநாயகம், கோலப்பன், கணேசன் ஆகியோா் சோ்ந்தும், சபரிநாதன் தனியாகவும் மனு தாக்கல் செய்தனா்.

இதில் சபரிநாதனின் முன்பிணை கோரிய மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. கோமதிவிநாயகம், கோலப்பன், கணேசன் ஆகியோரது முன்பிணை மனுவை நீதிபதி ஜெயக்குமாா் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலையில் நடராஜருக்கு சிறப... மேலும் பார்க்க

வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கநல்லூா் சாவடி தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் கணேசன் (45). கொத்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவா்கள் பயற்சி வகுப்பு தொடக்க விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் கே.ஜி.பிரகாஷ் தலைமை வ... மேலும் பார்க்க

வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவத் திருவிழா கொடியேற்றம்

சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சாத்தூா், அதைச் சுற்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்... மேலும் பார்க்க