குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்
தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பாத்திமா நகரில் வந்தபோது, வாண வேடிக்கையால் பா்னிச்சா் கடை மேற்கூரை மீது பட்டாசு விழுந்தது. இதனால், அக்கடையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கடை மற்றும் அலுவலகத்தின் மேற்கூரை எரிந்து சேதமானது. இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.