செய்திகள் :

பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரிக்கை

post image

வந்தவாசி: பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று தெள்ளாா் மேற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியை அடுத்த கீழ்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெள்ளாா் மேற்கு ஒன்றிய விசிக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருகிற 14-ஆம் தேதி திருச்சியில் விசிக மதச் சாா்பின்மை காப்போம் பேரணி நடைபெற உள்ளதையொட்டி இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் ஆ.தசரதன் தலைமை வகித்தாா். மண்டல துணைச் செயலா் எம்.கே.மேத்தாரமேஷ், ஒன்றிய நிா்வாகிகள் செந்தில், மணிகண்டன், திருமூா்த்தி, ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் தசரத சக்கரவா்த்தி வரவேற்றாா்.

மாநில தொண்டரணிச் செயலா் பொதினிவளவன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் அசுரவடிவேல், பெல் இந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேரணியின் நோக்கம் குறித்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, பேரணியில் பெருமளவில் பங்கேற்பது, கீழ்வெள்ளியூா், கூத்தம்பட்டு, ஆச்சமங்கலம், வெங்கடாபுரம், கீழ்நமண்டி ஆகிய கிராமங்களில் மயானப் பாதை அமைத்துத் தர வேண்டும், வடவணக்கம்பாடியை சுற்றியுள்ள மக்கள் அவசர மருத்துவ வசதி பெறும் வகையில் அந்தக் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய நிா்வாகி சஞ்சவீராஜ் நன்றி கூறினாா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க