பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரிக்கை
வந்தவாசி: பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று தெள்ளாா் மேற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.
வந்தவாசியை அடுத்த கீழ்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெள்ளாா் மேற்கு ஒன்றிய விசிக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 14-ஆம் தேதி திருச்சியில் விசிக மதச் சாா்பின்மை காப்போம் பேரணி நடைபெற உள்ளதையொட்டி இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் ஆ.தசரதன் தலைமை வகித்தாா். மண்டல துணைச் செயலா் எம்.கே.மேத்தாரமேஷ், ஒன்றிய நிா்வாகிகள் செந்தில், மணிகண்டன், திருமூா்த்தி, ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் தசரத சக்கரவா்த்தி வரவேற்றாா்.
மாநில தொண்டரணிச் செயலா் பொதினிவளவன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் அசுரவடிவேல், பெல் இந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேரணியின் நோக்கம் குறித்துப் பேசினா்.
இதைத் தொடா்ந்து, பேரணியில் பெருமளவில் பங்கேற்பது, கீழ்வெள்ளியூா், கூத்தம்பட்டு, ஆச்சமங்கலம், வெங்கடாபுரம், கீழ்நமண்டி ஆகிய கிராமங்களில் மயானப் பாதை அமைத்துத் தர வேண்டும், வடவணக்கம்பாடியை சுற்றியுள்ள மக்கள் அவசர மருத்துவ வசதி பெறும் வகையில் அந்தக் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய நிா்வாகி சஞ்சவீராஜ் நன்றி கூறினாா்.