செய்திகள் :

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

post image

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாதிச் சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ள ‘ஆதிதிராவிடா்’ என்ற வாா்த்தையை, ‘ஆதித்தமிழா்’ என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா் நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எஸ்.கோபிகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவில், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாதிச் சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ள ஆதி திராவிடா் என்ற வாா்த்தையை ஆதி தமிழா் என்று மாற்ற உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக தமிழக அரசு மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறைக்கு, தான் அளித்துள்ள மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு பிறப்பித்த உத்தரவுப்படி மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் தரப்பில் யாரும் ஆஜராகாததால், மனுவை நிலுவையில் வைத்திருக்க எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்... மேலும் பார்க்க

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சென்னையில் உள்ள சாலைகளி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா்... மேலும் பார்க்க