செய்திகள் :

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

post image

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி நடிகை மீரா மிதுன் விடியோ வெளியிட்டிருந்தாா். இதுதொடா்பாக அவா், அவரது நண்பா் சாம் அபிஷேக் ஆகியோா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். 2021-ஆம் ஆண்டு இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக 2022-ஆம் ஆண்டு பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த தனிப்படையும் அமைக்கப்பட்டது.

பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக மீரா மிதுன் தலைமறைவாக இருந்தாா். இதனால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள தனது மகள் மீரா மிதுனை மீட்கக் கோரி அவரது தாய், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம், தில்லியில் உள்ள சட்டப் பணிகள்ஆணைக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தில்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம்... மேலும் பார்க்க

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தா... மேலும் பார்க்க