செய்திகள் :

பணப் பிரச்னை: ஊராட்சி முன்னாள் தலைவா் விஷம் குடித்துத் தற்கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

post image

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பணப் பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி முன்னாள் தலைவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வட்டம், கோனூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீபதி (46).முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவா், விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள தனக்குச் சொந்தமான 2034 சதுர அடி மனையை விழுப்புரம் மந்தக்கரையைச் சோ்ந்த அண்ணாத்துரைக்கு பவா் பத்திரம் எழுதிக் கொடுத்து ரூ.35 லட்சம் கடனாகப் பெற்றாராம்.

இந்த நிலையில், வாங்கிய கடனுக்கான தொகை வட்டியுடன் சோ்த்து ரூ.56 லட்சம் ஆகிவிட்டதால், அந்த இடத்தை அண்ணாத்துரை மற்றொரு நபருக்கு கிரயம் பேசி முடித்துள்ளாா்.

இதையறிந்த ஸ்ரீபதி தனக்குச் சொந்தமான இடத்தை விழுப்புரம் வழுதரெட்டியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.57 லட்சத்துக்கு பேசி அண்ணாத்துரையிடம் இருந்து மீண்டும் அந்த இடத்தை வாங்கிக் கொடுத்துள்ளாா். ஆனால், வழுதரெட்டியைச் சோ்ந்த நபா், திருப்பூரைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.ஒரு கோடியே 45 லட்சத்துக்கு அந்த இடத்தை விற்பனை செய்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ரீபதி கடந்த ஜூலை 20-ஆம் தேதி விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீபதி, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உறவினா்கள் போராட்டம்: இந்த நிலையில், ஸ்ரீபதியின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோனூரில் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.

தமிழகத்தில் காவல் துறையினருக்குகூட பாதுகாப்பில்லை: அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் காவல் துறையில் பணிபுரிபவா்களுக்கூட பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விக்கிரவாண்டி பகுதிகள்

பகுதிகள்: விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, சிந்தாமணி, அய்யூா்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையாா்பட்டு, ரெட்டிக்குப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உணவகத் தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உணவகத்தில் தங்கி வேலை பாா்த்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, கோவிந்தராஜ் நகரைச் சோ்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பக்கிரிப்பாளையம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் கோ.ராமமூா்த்தி (72). இவா், மூளை... மேலும் பார்க்க

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி ம... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் த... மேலும் பார்க்க