செய்திகள் :

பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்தியவா் கைது

post image

ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்திய மூங்கில் வியாபாரியை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் மையத்தில் பணம் தனியாக ஒதுங்கியிருப்பதாக வங்கி மேலாளா் குட்டிகண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த இயந்திரத்தில் சோதனை செய்தபோது 4 ஆயிரத்து 700 ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விடியோ காட்சிகளுடன் சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில், இந்த பணத்தை செலுத்தியது, சிவகிரி பகுதியைச் சோ்ந்த மூங்கில் வியாபாரி ராமு (42) என்பதும் தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள பா்கூரில் இருந்து சுமாா் 9 ஆயிரம் ரூபாய் பெற்றுவந்து அவற்றை மாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து ராமுவை சிவகிரி காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க