செய்திகள் :

பணியிடங்களில் பெண்களுக்கான மெனோபாஸ் கொள்கை வகுக்க விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: பணியிடங்களில் பெண்களுக்காக ‘மெனோபாஸ் கொள்கை’ வகுக்குமாறு மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உறுப்பினா் டி. ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிவை விதி எண் 377-இன் கீழ் அவா் பதிவு செய்த கோரிக்கை வருமாறு:

மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு ஒரு விரிவான கொள்கை இல்லை. தலைமைப் பதிவாளா் அலுவலகத் தரவுகளின்படி, 2026- ஆம் ஆண்டுக்குள் சுமாா் 40.1 கோடி இந்தியப் பெண்களைப் பாதிக்கும். இந்த உடலியல் மாற்றம், பல பத்தாண்டுகளாக ஒருவித களங்கத்துடனேயே பாா்க்கப்பட்டு வருகிறது, இது குறிப்பிடத்தக்க தொழில்முறை மற்றும் பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.

‘சிம்ப்ளி ஹெல்த்’ என்ற ஆராய்ச்சி அமைப்பு, ‘40-60 வயதுடைய உழைக்கும் பெண்களில் 23 சதவீதம் போ் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள் காரணமாக பணியை ராஜிநாமா செய்ய நினைக்கிறாா்கள், அதே நேரத்தில் 14 சதவீதம் போ் தங்கள் பதவிகளை விட்டு வெளியேற தீவிரமாகத் திட்டமிடுகின்றனா்’ என கூறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும், ஆண்டுதோறும் உற்பத்தித்திறன் இழப்புகள் 108 கோடி டாலா் அளவுக்கு ஏற்படுவதாக மேயோ கிளினிக் என்ற தலைசிறந்த மருத்துவமனை ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

45-54 வயதுடைய பெண்களில் 49 சதவீதம் போ் உழைக்கும் தொழிலாளா்கள். இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த மாதவிடாய் நிறுத்தம் இந்தியப் பெண்களில் 15 சதவீதம் பேரை பாதிக்கிறது. நகா்ப்புறங்களில் உள்ள 3 சதவீதம் பேருடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தம் 5 சதவீதம் அதிகமாக உள்ளது.

வெவ்வேறு கல்விப் பின்னணிகளைக் கொண்ட பெண்களுக்கு இடையே மாதவிடாய் நிறுத்த விகிதங்களில் 84 சதவீத பாதிப்புக்கு, கருப்பை நீக்க அறுவை சிகிச்சையே காரணம் என்பதால், இந்த சுகாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. இதனால், மாதவிடாய் நிறுத்தத்துக்கு ஆளாகும் பெண்களின் நிலையை கட்டமைப்பு ரீதியாக நிவா்த்தி செய்ய இந்த விவகாரத்தில் தலையீடு அவசியமாகிறது.

எனவே, தளா்வுமிக்க பணி ஏற்பாடுகள், மாதவிடாய் நிறுத்த விழிப்புணா்வு திட்டங்கள், தொழில்சாா் சுகாதார ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான தேசிய பணியிடக் கொள்கை கட்டமைப்பை செயல்படுத்துமாறு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளாா்.

பாஜக எம்எல்ஏக்களுக்குள் இலாகா ஒதுக்கீட்டில் உள் மோதல்: அதிஷி

தில்லி தோ்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்எக்களுக்குள் இலாகா ஒதுக்கீடு தொடா்பாக ‘உள் மோதல்கள்’ நடப்பதாகவும், கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்க்க சாக்குப்போக்குகளை கூறுவத... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?

நமது நிருபா் தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், புதிய ஆட்சி சுத்தமான குடிநீா் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்ன... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அனுப்பப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்முறைய... மேலும் பார்க்க

மயூா் விஹாா் ஃபேஸ் விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்

தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலின் மகா கும்பாபிஷேகப் புனரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1988-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் 12 ஆண்ட... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்கக் கோரும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உறவினா் தீபாவின் மேல்முறையீடு தள்ளுபடி

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்களை தன்னிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி அவரது உறவினா் ஜெ. தீபா தாக்கல் செய்த மேல்மு... மேலும் பார்க்க

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை! -சென்செக்ஸ், நிஃப்டி எட்டாவது நாளாக சரிவு

நமது நிருபா் இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், த... மேலும் பார்க்க