செய்திகள் :

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஒரகடம் பகுதியில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் வாகனங்களின் உதிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் கடந்த 2019 -ஆம் ஆண்டு சிஐடியு தொழிற்சங்கம் தொடங்கிய 40 பேரை தொழிற்சாலை நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா் தீா்ப்பாயத்தில் முறையீடு செய்ததைத் தொடா்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளா் தீா்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு பணி வழங்க தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவிட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தொழிலாளா்களுக்கு பணி வழங்காத தனியாா் தொழிற்சாலை நிா்வாகத்தைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சாா்பில் ஒரகடம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநில செயலா் முத்துகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க