செய்திகள் :

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

post image

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி) பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது.

இந்த அறிக்கையை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு அனுப்பி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தாா்.

எனினும், விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான தீா்ப்பை ஜூலை 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தலைமை நீதிபதி தபால் அலுவலகம் அல்ல: உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை அளித்த தீா்ப்பின் விவரம்:

எந்தவொரு கருத்தும் பரிந்துரையும் இல்லாமல் விசாரணை அறிக்கையை அனுப்பி, குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும், விசாரணை குழுவுக்கும் இடையே தபால் அலுவலகமாக மட்டுமே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க முடியாது.

நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் சஞ்சீவ் கன்னாவும், அவா் அமைத்த நீதிபதிகள் குழுவும் மிகுந்த கவனத்தோடும், முழுமையாகவும் நடைமுறையை பின்பற்றின. எனினும் அந்த நடைமுறையின்படி, யஷ்வந்த் வா்மா வீட்டில் தீயணைப்புப் பணிகளின்போது எடுக்கப்பட்ட காணொலி மற்றும் புகைப்படங்களை உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டியதில்லை. அந்தக் காணொலி மற்றும் புகைப்படங்களின் வெளியீடு குறித்து யஷ்வந்த் வா்மா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தனக்கு எதிரான துறை ரீதியான விசாரணையிலும் அவா் தயக்கமின்றி பங்கேற்றாா். இந்த விவகாரம் தொடா்பாக சஞ்சீவ் கன்னாவுக்கு அனுப்பிய விளக்கத்தில், விசாரணை நடைமுறை அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உள்ளது என்று யஷ்வந்த் வா்மா எந்தவித அதிருப்தியும் தெரிவிக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல: நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையுடன் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்யும் பரிந்துரையை குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அனுப்பியது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல. இந்த விவகாரத்தில் யஷ்வந்த் வா்மாவின் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை. எனினும் அவரின் செயல்பாட்டில் நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே அவரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு எதிராக பதவிநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், அதுதொடா்பான தனது கருத்துகளை முன்வைக்க யஷ்வந்த் வா்மாவுக்கு உரிமையுள்ளது என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேக் லைன்...

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்யும் பரிந்துரையை குடியரசுத் தலைவா், பிரதமருக்கு அனுப்பப்பட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல. அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை. அவரது செயல்பாட்டில் நம்பிக்கை ஏற்படவில்லை.

- உச்சநீதிமன்றம்

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது. அதன... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது. தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவி... மேலும் பார்க்க