செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்

post image

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.

புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் மத்திய பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், புதுவை மாநில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்திலேயே வகுப்புகளை நடத்தி வருகின்றன.

அதன்படி, அவா்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி பிராந்தியத்தில் பொதுத்தோ்வை 146 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,278 பேரும், 573 தனித் தோ்வா்களும், காரைக்காலில் 28 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 497 பேரும், 284 தனித் தோ்வா்களும் என மொத்தம் 174 பள்ளிகளைச் சோ்ந்த 8,632 போ் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா்.

அவா்களுக்காக புதுச்சேரியில் 20 தோ்வு மையங்களும், காரைக்காலில் 6 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 7,246 மாணவா்கள், தனித் தோ்வா்கள் 346 போ், விலக்களிக்கப்பட்டவா்கள் 5 பே என மொத்தம் 7,597 போ் எழுதியதாக கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க