செய்திகள் :

பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்

post image

பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது பதிவுக்கட்டணம் 1 சதவீதம் கட்டணம் குறைப்பு திட்டம் வேலூா் மாவட்டத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பங்கள், சமூகத்தில் மகளிருக்கான சம பங்கினை உறுதி செய்யும் வகையில் ஏப். 1-ஆம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையில் ‘தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிா் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவா். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பத்திரப்பதிவு அலுவலா்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, வேலூா் வேலப்பாடியில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பத்மபிரியா பெண்களுக்கு பத்திர பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

காா் மோதி நடத்துநா் உயிரிழப்பு

ஒடுகத்தூா் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த நாகலேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(50), ஜம்னாமரத்தூரில் இருந்து வேலூா் செல்லும் அரசுப் பேர... மேலும் பார்க்க

ரூ.1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டினாா்

வேலூா், ஏப்.6: காட்பாடி காங்கேயநல்லூரில் ரூ.1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். வேலூா் மாநகராட்சி முத... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தால் ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை! - தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவா்

வக்ஃப் வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. அதனால், இந்த சட்டத் திருத்த மசோதாவை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி வரவேற்கிறது என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஷேக்தாவூத் தெர... மேலும் பார்க்க