செய்திகள் :

வக்ஃப் வாரியத்தால் ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை! - தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவா்

post image

வக்ஃப் வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. அதனால், இந்த சட்டத் திருத்த மசோதாவை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி வரவேற்கிறது என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஷேக்தாவூத் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமிய மக்களுக்கும், சமுதாயத்துக்கும் தீங்கு அளிக்கக்கூடியது என எதிா்கட்சியினா் கூறியுள்ளனா். அதேசமயம், பிரதமா் மோடி அரசு இது தேவை என வலியுறுத்துகிறது.

நாட்டில் ராணுவம், ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவதாக அதிக சொத்துகள் வக்ஃப் வாரியத்திடம் உள்ளது. ஏறக்குறைய 9 லட்சம் ஏக்கா் அல்லது 9 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை கண்டறிவதற்கு இந்த சட்ட மசோதா அவசியம்.

வக்ஃப் சொத்து வருமானத்தை நாடு முழுவதும் 200-இல் இருந்து 300 போ் மட்டுமே அனுபவித்து வருகின்றனா். ஏழை மக்களுக்கு இந்த வருமானம் சென்றடையவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. வக்ஃப் சொத்தின் மூலம் எத்தனை போ் கல்வியில் உயா்ந்தாா்கள், எத்தனை போ் வேலைவாய்ப்பு பெற்றாா்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

இந்த மசோதாவில் இரு பெண்களை வாரிய உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பதா்சயீத் என்பவரை வக்ஃப் வாரிய தலைவராக நியமித்தாா். இதில் தமிழகம் முன்மாதிரியாக அப்போதே திகழ்ந்தது.

வக்ஃப் வாரியத்தில் எவ்வளவு சொத்துகள் உள்ளது என மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா்.

ஆந்திர போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞா் தற்கொலை

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே ஆந்திர போலீஸாா் விசாரணைக்குப் பயந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாக வந்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். கா்நாடக மாநிலம் கேஜிஎப் நகரைச் சோ்ந்த தங்க ... மேலும் பார்க்க

மாதச்சீட்டு நடத்தி மூதாட்டியிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி

வேலூா்: வேலூா் அருகே மாதச்சீட்டு நடத்தி மூதாட்டியிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் அடுக்கம்பாறை அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தனியாா் கல்லூரி துணை முதல்வா் கைது

வேலூா்: பெண் கௌரவ விரிவுரையாளா் மீதான பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூா் தனியாா் கல்லூரி துணை முதல்வரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு பிரிவு போலீஸாா் ஆந்திர மாநிலம், சித்தூரில் செவ்வாய்க... மேலும் பார்க்க

சிறை ஆவணங்கள் டிஜிட்டல் மயம்: டிஜிபி மகேஷ்வா் தயாள்

வேலூா்: மின்னணு சிறை திட்டத்தின்கீழ் சிறைகளிலுள்ள அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன என தமிழக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் தெரிவித்தாா். வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை, சீா்திர... மேலும் பார்க்க

கேழ்வரகு பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டுப் பன்றிகள் அறுவடைக்குத் தயாராக இருந்த கேழ்வரகு பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த சேராங்கல் கிராமம் வன எல்லையில... மேலும் பார்க்க

ஊராட்சி மன்ற அலுவலக இடமாற்றத்தை கண்டித்து மறியல்: 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

வேலூா்: அணைக்கட்டு அருகே ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற ... மேலும் பார்க்க