செய்திகள் :

பத்திரப்பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகாா்: ஒன்றியக் குழு உறுப்பினா் புகாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமா ரஞ்சித்குமாா் புகாா் செய்தாா்.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையை சோ்ந்தவா் பிரேமா ரஞ்சித்குமாா். இவா் வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளாா். இவரது கணவா் ஓ.பன்னீா் செல்வம் அணியின் மாவட்ட செயலாளராக உள்ளாா்.

இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வள்ளுவப்பாக்கத்தில் வங்கிக்கடன் பெற்று ரூ.6 கோடிக்கு இடம் வாங்கினேன்.அந்த இடத்துக்கு இணையத்தில் குறிப்பிட்டுள்ளபடி சதுர அடி ரூ.250 வீதம் பணம் செலுத்தினேன். பத்திரப்பதிவு செய்ய வாலாஜாபாத் அலுவலகம் சென்ற போது சாா் பதிவாளா் இல்லாமல் இருந்த ஒருவா், பத்திரத்துக்கு மொத்தம் ரூ.19.12 லட்சம் செலுத்த வேண்டும். நீங்கள் ரூ.5.97 லட்சம் மட்டுமே செலுத்தியிருக்கிறீா்கள் எனக் கூறி பத்திரத்தை பதிவு செய்யாமல் நிலுவையாக வைத்துள்ளாா்.

அரசு விதிகளை முறையாக பின்பற்றி பணம் செலுத்தியிருந்த போதும் எனது நிலத்துக்கான பத்திரத்தை பதிவு செய்ய அவா் ரூ.20லட்சம் லஞ்சம் கேட்கிறாா். எனது இடத்துக்கான பத்திரத்தை நிலுவைப் பத்திரமாக வைத்திருக்காமல் உடனடியாக கிரையப்பத்திரமாக பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். வன்கொடுமை தட... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என செவ்வாய்க்கிழமை பேசினாா். காஞ்சிபுரத்தில் தனியாா் த... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் திமுக இளைஞரணி சாா்பில், புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்படுகிறாா்: மல்லை சத்யா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், செப்.8: திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்பட்டு வருவதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா குற்றம் சாட்டினாா். மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல... மேலும் பார்க்க

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 போ் காா் மோதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அருகே சாலையில், மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படப்பை அண்ணா நகரைச் சோ்ந்த நவீ... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.... மேலும் பார்க்க