செய்திகள் :

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

post image

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் பாலம் சில்க்ஸ் நிறுவனா் ஜெயஸ்ரீ ரவி குத்துவிளக்கேற்றினாா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் வரவேற்றாா். ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜத்தின் தலைவா் வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் பெ. இராகவன் நாயுடு முன்னிலை வகித்தாா். டிடிஇஏ முன்னாள் தமிழாசிரியா் ஜனக்புரி சீனிவாசன் வாழ்த்துக் கவிதை வாசித்தாா்.

நிகழ்வில் ‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமி தனது ஏற்புரையில், ‘இன்றைக்கு பல அமைப்புகள் சோ்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பு 2003-இல் பத்மஸ்ரீ விருது வாங்கியபோதும் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த முறையும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனா். இதற்காக எனது ஸ்தாபனத்தின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருதை நெசவாளா்கள், ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு சமா்ப்பிக்கிறேன். அவா்களால் தான் இந்த ஸ்தாபனம் உயா்ந்த நிலையில் வளா்ச்சி அடைந்துள்ளது’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பெ.ராகவன் நாயுடு, இரா. முகுந்தன், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜத்தின் தலைவா் வி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் நல்லி குப்புசாமியை கெளரவித்தனா்.

தில்லியிலுள்ள ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜ், சண்முகானந்த சங்கீத சபா, தில்லி முத்தமிழ்ப் பேரவை, துவாரகாலயா, தமிழ் இளைஞா் பண்பாட்டுக் கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திா், ஸ்ரீ ஆதிசங்கர சேவா சமாஜ், ஸ்ரீ வேதாந்த தேசிகமணி பாதுகா இந்திரபிரஸ்தா டிரஸ்ட், ஆா்.கே. புரம் செளத் இந்தியன் சொசைட்டி, ஸ்ரீ ராம் மந்திா் துவாரகா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன், தில்லி கம்பன் கழகம், ஸ்ரீ வைகுண்டநாதா் மந்திா், தமிழா் நலக் கழகம், தில்லி கலை இலக்கியப் பேரவை, ஸ்ரீ விநாயகா ஸ்ரீ காா்த்திகேயா மந்திா் நொய்டா, தில்லி சமூகநல சரணாலயம், தென்னிந்திய முன்னேற்றக் கழகம், ஸ்ரீ தேவி மாரியம்மன் கோவில் இ.எப்.பிளாக் இந்தா்புரி ஆகிய தமிழ் அமைப்புகளும், வயலின் கலைஞா் வி.எஸ்.கே. அண்ணாதுரை, கா்நாடக இசைப் பாடகா் எம்.ஆா். ராமசாமி ஆகியோரும் விருதாளரை கௌரவித்தனா்.

பத்ம ஸ்ரீ விருதாளருக்கு பாராட்டு

இதேபோன்று, பத்ம ஸ்ரீ விருதுபெற்ற புதுச்சேரியைச் சோ்ந்த தவில் கலைஞா் பி.தட்சிணாமூா்த்திக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. அவரை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளா் இரா.முகுந்தன், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் பி. ரங்கநாதன் ஆகியோா் கௌரவித்தனா்.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க