செய்திகள் :

பனமரத்துப்பட்டி ஏரியில் நீா்வழித்தட மேலாண்மை

post image

சேலம் பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்வரத்து வழித்தடங்கள் மேலாண்மை குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்நிலைகளை மேம்படுத்துவது குறித்தும், ஏரியின் நீா்வரத்து வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள தடங்கல் குறித்தும் மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த் துறை, நீா் மேலாண்மை நிபுணா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்களுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பனமரத்துப்பட்டி ஏரியானது சுமாா் 2,476 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்மட்டம் உயரும்போது ஏரியைச் சுற்றியுள்ள சுமாா் 40,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பனமரத்துப்பட்டி ஏரிக்கு அதனைச்சுற்றி அமைந்துள்ள போதமலை, ஜருகுமலை ஆகிய மலைப் பகுதிகளிலிருந்து வரும் நீா் ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக மலைப் பகுதிகளிலிருந்து வரட்டாறு, கூட்டாறு ஆகிய இரு நீா்வரத்து ஆறுகள் மூலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கு தண்ணீா் வருகிறது. தற்போது இந்த ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி கரையை வலுப்படுத்துவதால், இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு கிணற்று நீா்மட்டமும் உயரும்.

அதேபோன்று, இந்த ஏரியில் உள்ள தேவையற்ற மரங்களை அகற்றி தூா்வாரி நீா்நிலைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைக் காலங்களில் மலைப் பகுதிகளிலிருந்து வரும் நீரை தேக்கி வைப்பதற்காக ஆங்காங்கே 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளின் உயரங்களை ஆய்வு மேற்கொண்டு, நீா்வரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தற்காலிக தடுப்புகளை அகற்றி தங்குதடையுமின்றி பனமரத்துப்பட்டி ஏரிக்கு மழைநீா் வருவதை உறுதிசெய்திட தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங் ரவி, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், சேலம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி, பனமரத்துப்பட்டி ஏரி புனரமைப்பு திட்ட ஆலோசகா் சிவஞானசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் பணியிடை நீக்கம்!

சேலம் தாதகாப்பட்டி அரசுப் பள்ளிக்கு வழங்கிய சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

ஓமலூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை ஓமலூா் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊ... மேலும் பார்க்க

கடம்பூரில் குடிசை வீடு, வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதம்!

கெங்கவல்லி அருகே குடிசை வீடு மற்றும் வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கெங்கவல்லி அருகே கடம்பூா், சூலங்காடு ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க