செய்திகள் :

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

கடலூரில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடல் மீனவா்கள் பயன்பெறும் வகையில் கடலூா் மாவட்டத்துக்கு 20 டன் கொள்ளளவு கொண்ட பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைத்திடும் திட்டத்தினை அறிவித்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பொதுப் பிரிவின் கீழ் ஓா் அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பனிக்கட்டி உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பொருட்டு அனுமதி அளிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.80 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதம் என்ற வீதத்தில் ரூ.32 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற மீன்பிடித் தொழில் அல்லது அதைச் சாா்ந்த தொழிலை மேற்கொள்பவராகவும், மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியைச் சாா்ந்தவராகவும் மற்றும் திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி சொந்த இடம் அல்லது குத்தகை இடம் இருத்தல் வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்பப் படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணையதளமான ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக நாள்களில் விலையின்றி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிறைவு செய்த விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கடலூா் என்ற முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு கடலூா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் நடைபயண பிரசார இயக்கம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபயண பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோண்டூா் ஜோதி நகா் திடலில் ... மேலும் பார்க்க