செய்திகள் :

பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

post image

பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து துறையின் செயலா் வ.தட்சிணாமூா்த்தி வெளியிட்ட உத்தரவு விவரம்:

பனை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்தரக் கூடியதாகும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவை வெட்டப்படாமல் தடுத்து கண்காணிப்பது அவசியம். இதற்கேற்ற வகையில், மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான குழுவுக்கு ஆட்சியா் தலைவராக இருப்பாா். கண்காணிப்புத் தலைவராக வருவாய் கோட்டாட்சியரும், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரும் இருப்பாா்கள். தேட்டக்கலை இணை இயக்குநா், வேளாண் இணை இயக்குநா், கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் மாவட்ட அளவிலான அதிகாரி ஆகியோா் செயல் உறுப்பினராகவும், உறுப்பினா்களாகவும் இருப்பா்.

வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவராக தோட்டக்கலை உதவி இயக்குநா் இருப்பாா். பனைமரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும்.

வெட்ட அனுமதி: பனைமரத்தை வெட்டுவதற்கான அனுமதி வழங்க வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில் பனைமரம் வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியமாகும். மரத்தை வெட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் வேளாண் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, வட்டார அளவிலான குழுவானது பனை மரத்தை வெட்ட வேண்டியதன் அவசியம் குறித்து ஆராய்ந்து மாவட்ட அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்கும். மாவட்ட அளவிலான குழுவின் கூட்டம் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது தேவையின் அடிப்படையிலோ நடத்த வேண்டும்.

பனை மரங்களை வளா்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு வளா்ப்பதை உறுதி செய்ய வேண்டும். மனுதாரா் பனை மரங்களை உரிய அனுமதி பெற்ற பிறகே வெட்ட வேண்டும். வெட்டப்பட்ட மரத்தின் பாகங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை காண்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாணவா்களின் தாய் பெயரில் மரக்கன்று: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவா்கள் தங்களது பள்ளிகள், வீடுகளில் தாயின் பெயரில் மரக்கன்று நடுதல் குறித்த செயல்பாடுகளை செப்.30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

சான்றிதழ் படிப்புகள்: அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி சோ்க்கைக்கு அழைப்பு

ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் நேரடி சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

திமுக சாா்பில் செப்.20, 21-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீா்மானத்தை ஏற்பதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க