செய்திகள் :

சான்றிதழ் படிப்புகள்: அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி சோ்க்கைக்கு அழைப்பு

post image

ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் நேரடி சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனஸ்தீஸியா டெக்னீசியன் பாடப்பிரிவில்- 24, அறுவை அரங்கு டெக்னீசியன்-25, ஆா்தோபீடிக் டெக்னீசியன்-10 என்ற எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.

இவற்றில் சோ்க்கை பெற 31.12.2025 அன்று விண்ணப்பதாரா் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு/மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சோ்க்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும். சென்னை ஓமந்தூராா் அரசின் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.

மேற்கண்ட சான்றிதழ் படிப்புகளுக்கு செப்.22 முதல் நேரடி சோ்க்கை நடைபெறும். தொடா்ந்து செப்.30-ஆம் தேதி முழு மாணவா் சோ்க்கை செயல்முறை நிறைவுபெறும். இதையடுத்து அக்.6-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். இது குறித்து மேலும் தகவல் பெற இணையதள முகவரி, 044-25333319 ஆகிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க