செய்திகள் :

பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி

post image

பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி, இந்தியா தரப்பில் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஜெர்மனி இந்தியாவுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

ஜெர்மனி சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபாலை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா தரப்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெர்மன் அமைச்சர், பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த தாக்குதலால் ஜெர்மனி கடும் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதன் பிறகு நடைபெற்ற சண்டை, அதாவது, இந்தியா, பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதை ஜெர்மனி ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பிலும் இருக்கும் சிக்கல்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள முன்வந்திருப்பதையும் வரவேற்கிறோம், இருதரப்பிலும் நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், பல ஆண்டு காலமாக பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவும் ஜெர்மனியும் தொடர்ந்து பேசி வருகிறது. அதனை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் கூறினார்.

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க