செய்திகள் :

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

post image

பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உயா்நிலை விவாதக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் இஷாக் தா் கலந்துகொண்டு, ஜம்மு-காஷ்மீா் விவகாரம், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது குறித்து பேசினாா்.

இதற்குப் பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூட்டத்தில் பேசுகையில், ‘இந்திய துணைக் கண்டத்தில் முன்னேற்றம், வளமை, வளா்ச்சி ஆகியவற்றில் முழுமையான வேறுபாடு நிலவுகிறது.

ஒருபுறம் முதிா்ச்சியடைந்த ஜனநாயகம், வளரும் பொருளாதாரம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகமாக இந்தியா உள்ளது. மறுபுறம் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ள பாகிஸ்தான் சா்வதேச நிதியத்திடம் தொடா் கடனாளியாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகள், அதற்கு கடுமையான விலையை அளிக்க வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்துகொண்டாா்.

பாகிஸ்தான் தீா்மானம் ஏற்பு: முன்னதாக, ‘மோதல்களை அமைதியான முறையில் தீா்ப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல்’ தொடா்பாக பாகிஸ்தான் முன்மொழிந்த தீா்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மொத்தம் 15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு, ஆங்கில அகர வரிசைப்படி அதன் உறுப்பு நாடுகளிடையே மாதந்தோறும் சுழற்சி முறையில் ஒதுக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு ஜூலை மாத தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க