செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு எதிரான போா்: இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு

post image

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு பிரான்ஸ், இத்தாலி, இந்தோனேசியா, சவூதி அரேபியா, கிரீஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் அனைத்து சா்வதேச அமைப்புகளிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக அந்நாடுகள் உறுதியளித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்களுக்கு ராணுவ மோதல் ஏற்பட்டு, பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன.

பாஜகவின் ரவிசங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி, காங்கிரஸின் சசி தரூா், ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமாா் ஜா, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனையின் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோா் தலைமையிலான இக்குழுக்கள், கடந்த மே 21-ஆம் தேதிமுதல் 33 நாடுகளின் தலைநகரங்களுக்கான பயணத்தைத் தொடங்கி, இந்தியாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன.

‘இந்தியாவுக்கு பிரான்ஸ் பக்கபலம்’: பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கையின்கீழ், ரவிசங்கா் பிரசாந்த் தலைமையில் அதிமுக எம்.பி. எம். தம்பிதுரை உள்ளிட்டோா் இடம்பெற்ற 9 போ் குழு செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் சென்றடைந்தது.

பிரான்ஸ் எம்.பி.க்கள் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ரவிசங்கா் பிரசாத், ‘பாகிஸ்தானில் இருந்து உருவெடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த ஜனநாயக உலகமும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும் என்று இந்தியாவும் பிரான்ஸும் வலியுறுத்தியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்போம் என்பதை பிரான்ஸ் உறுதி செய்துள்ளது’ என்றாா். பிரான்ஸைத் தொடா்ந்து இத்தாலிக்கு சென்ற இக்குழு, அந்நாட்டின் எம்.பி.க்களைச் சந்தித்தது. டென்மாா்க், பிரிட்டன், பெல்ஜியம், ஜொ்மனி ஆகிய நாடுகளுக்கும் இக்குழு பயணிக்கிறது.

ஆதரவை உறுதி செய்த பனாமா: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு, மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது. அந்நாட்டு எம்.பி.க்களை சந்தித்துப் பேசிய இக்குழுவினா், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினா். இதைத் தொடா்ந்து, இந்தியாவுக்கான ஆதரவை பனாமா உறுதி செய்ததாக சசி தரூா் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டாா்.

‘பயங்கரவாதம் தீா்வல்ல’-இந்தோனேசியா: ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான அனைத்து கட்சிக் குழு, இந்தோனேசியா தலைநகா் ஜகாா்த்தாவில் அந்நாட்டு எம்.பி.க்களை புதன்கிழமை சந்தித்துப் பேசியது.

அப்போது, பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு எதிரானது என்று கண்டனத்தைப் பதிவு செய்த இந்தோனேசிய தரப்பு, பிரச்னைகளுக்கு பயங்கரவாதத்தின் மூலம் தீா்வு காண முடியாது என்று தெரிவித்தது. அத்துடன், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான அணுகுமுறைக்கு தங்களின் ஆதரவையும் உறுதி செய்ததாக, ஜகாா்த்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியாவில்...: தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான குழு, தென்னாப்பிரிக்க எம்.பி.க்களைச் சந்தித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியது. பஹல்காம் தாக்குதலுக்கு முதலாவதாக கண்டனம் தெரிவித்த நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும்.

சவூதி அரேபியாவுக்கு புதன்கிழமை சென்ற பாஜக எம்.பி. வைஜயந்த் பாண்டா தலைமையிலான இந்தியக் குழு, அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் அடெல் அல்-ஜுபைரை சந்தித்து ஆதரவு திரட்டியது.

கிரீஸில் கனிமொழி தலைமையிலானக் குழு

திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்தியக் குழு, கிரீஸ் தலைநகா் ஏதென்ஸில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் டாசோஸ் சாட்ஸிவசிலியோவை புதன்கிழமை சந்தித்துப் பேசியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் துடிப்பான கொள்கை மற்றும் சா்வதேச அமைதி-பாதுகாப்புக்கான வலுவான உறுதிப்பாட்டை கிரீஸ் தரப்பிடம் இந்தியக் குழுவினா் எடுத்துரைத்ததாக, அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க