செய்திகள் :

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

post image

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

தொடர்ந்து, கடற்படை அதிகாரிகளுடன் அவர் பேசும்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத விளையாட்டு தற்போது நிறுத்தப்பட்டதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை எச்சரிக்கிறேன். மேலும், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களையும் இந்தியாவிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில், இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது. அதனை எதிர்கொள்ளும் அனைத்து வழிகளையும் இந்தியா மேற்கொள்ளும். பாகிஸ்தான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததையும் செய்வதற்கு இந்தியா தயங்காது. ஆகையால், அந்நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளை அவர்களே அழிப்பதுதான் அவர்களுக்கு நல்லது.

ஆபரேஷன் சிந்தூர் என்பது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது பயங்கரவாதத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பயிற்சி மட்டும்தான்.

இந்தியாவுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முயன்றால், இந்த முறை இந்திய கடற்படையும் களத்தில் இறங்கும். 1971 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையும் போரில் ஈடுபட்டபோது, பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும் இந்திய கடற்படை சேர்க்கப்பட்டிருந்தால், இந்த முறை பாகிஸ்தான் நான்காகப் பிரிந்திருக்கும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க

இளம் எம்.பி.யை கரம்பிடிக்கும் ரிங்கு சிங்! காதல் திருமணமா?

சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜை இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேச... மேலும் பார்க்க

மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!

கேரளத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (வயது 44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் ச... மேலும் பார்க்க

கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை வ... மேலும் பார்க்க

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 பேர் பலி

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள். சிக்கிமில் பெய்த கனமழை காரணமாக சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ... மேலும் பார்க்க