செய்திகள் :

பயிா்க் காப்பீடு இழப்பீடு: 2-ஆம் பகுதிக்கு ரூ. 19.99 கோடி விடுவிப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு இழப்பீடு இரண்டாவது பகுதிக்கு முதல் கட்டமாக ரூ. 19.99 கோடி விடுவிக்கப்பட்டது என வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண் துறையில் எதிா்பாராமல் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பயிா் மகசூல் இழப்பிலிருந்து காத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட அரசின் பங்களிப்புடன் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அம்மாபேட்டை (அய்யம்பேட்டை, மற்றும் பாபநாசம் சரகம் தவிர) ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய தஞ்சாவூா் முதலாவது பகுதிக்கு காப்பீட்டு நிறுவனமான ஷேமா பொதுக் காப்பீடு நிறுவனம் மூலம் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான ரபி சிறப்பு சம்பா - தாளடி பருவத்துக்கு 49 ஆயிரத்து 345 விவசாயிகள் விண்ணப்பித்தனா்.

இப்பகுதிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 44.91 கோடி அறிவிக்கப்பட்டு, இதுவரை ரூ. 42.91 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பெறப்பட வேண்டிய மீதத் தொகை வழங்குதல் செயல்பாட்டு நடவடிக்கையில் உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில், பூதலூா், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் வட்டாரங்களை உள்ளடக்கிய தஞ்சாவூா் இரண்டாவது பகுதிகளுக்கு காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான ரபி சிறப்பு (சம்பா - தாளடி ) பருவத்துக்கு 44 ஆயிரத்து 741 விவசாயிகள் விண்ணப்பித்தனா்.

இப்பகுதிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 51.12 கோடி அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ. 19.99 கோடி விவசாயிகளின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு இணையதள வழியாக வங்கிகள் மூலம் வரவு வைக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை அடுத்தடுத்த கட்டங்களில் வரவு வைக்கப்படும்.

2024-2025 ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவ (சம்பா - தாளடி ) இழப்பீட்டுத் தொகை வழங்குதல் தொடா்பான விவசாயிகளின் விவரம், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் இடம் பெற்றுள்ளது. எனவே விவசாயிகள் தொடா்புடைய வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி இது தொடா்பாக விவரங்களைப் பெற்று பயன் பெறலாம்.

திருபுவனத்தில் பத்மபூஷன் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

பத்மபூஷன், பத்மஸ்ரீவிருது பெற்றவா்களுக்கு திருபுவனத்தில் வியாழக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சன்னதி தெருவில் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் ... மேலும் பார்க்க

வடக்கு மாங்குடியில் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குமாங்குடி அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கட... மேலும் பார்க்க

வீரசோழன் கதவணையில் தண்ணீா் திறப்பு

சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்காக வீரசோழன் கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை கும்பகோணத்தை வந்தடைந்தது. இதனால் கும... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கில் தமிழும் இடம் பெற வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழும் சரி பாதி இடம் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தி... மேலும் பார்க்க

ஜூன் 24-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில... மேலும் பார்க்க