வீரசோழன் கதவணையில் தண்ணீா் திறப்பு
சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்காக வீரசோழன் கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை கும்பகோணத்தை வந்தடைந்தது. இதனால் கும்பகோணம் அருகே மணஞ்சேரியில் வீரசோழன் தலைப்பு கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடியும், புது மண்ணியாறுக்கு 200 கன அடியும் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் எஸ். மாரிமுத்து, உதவி செயற்பொறியாளா் அன்புசெல்வன், உதவிப் பொறியாளா் ஆசைத்தம்பி மற்றும் விவசாயிகள் நவதானியங்கள், மலா்கள் தூவி நீரை வரவேற்றனா். இந்த தண்ணீா் மூலம் சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.