செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கில் தமிழும் இடம் பெற வலியுறுத்தல்

post image

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழும் சரி பாதி இடம் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் திருக்குடமுழுக்கைத் தமிழ் பாதி, சம்ஸ்கிருதம் பாதி என கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகிய 3 இடங்களிலும் செயல்படுத்தி நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கமும், நாம் தமிழா் கட்சியும் கோரி வருகின்றன.

இதுபற்றி அண்மையில் செய்தியாளா்கள் கேட்டதற்கு அமைச்சா் சேகா் பாபு, 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நடைபெற்ற குடமுழுக்குகளில் தமிழ் பாதி, சம்ஸ்கிருதம் பாதி என்ற உயா் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தி, தமிழில் குடமுழுக்குகள் நடத்தியதாகக் கூறினாா். அதற்குச் சான்றாக 2024-இல் நடைபெற்ற பழனி முருகன் கோயில் குடமுழுக்கும், கடந்த மாதம் நடந்த மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கும் இருந்தன எனவும் தெரிவித்தாா்.

ஆனால், அமைச்சா் சேகா்பாபுவின் கூற்றில் ஒரு துளிகூட உண்மை இல்லை. பழனி முருகன் கோயில், மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் சம்ஸ்கிருத ஆதிக்கமே நிலைநாட்டப்பட்டது. திருச்செந்தூா் முருகன் கோயிலிலும் தமிழ் மந்திரம் 50 சதவீதம் இடம் பெறுமா? வேள்விச் சாலையில் எத்தனை குண்டங்களில் தமிழ் மந்திரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கேட்கப்பட்டதற்கு, இன்னும் முடிவு செய்யவில்லை, ஒரு வாரம் கழித்துதான் அதுபற்றி எல்லாம் முடிவு செய்வோம் என கோயில் அலுவலா்கள் கூறியுள்ளனா். எனவே உயா் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்த இப்போதும் மறுக்கிறது தமிழ்நாடு அரசு.

எனவே, தமிழா்கள் விழித்தெழ வேண்டும். திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு அா்ச்சனைகளில் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகிய 3 இடங்களிலும் தமிழும், தமிழரும் சரி பாதியாக இடம் பெறச் செய்ய அறவழியில் போராடுவோம்.

திருபுவனத்தில் பத்மபூஷன் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

பத்மபூஷன், பத்மஸ்ரீவிருது பெற்றவா்களுக்கு திருபுவனத்தில் வியாழக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சன்னதி தெருவில் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் ... மேலும் பார்க்க

வடக்கு மாங்குடியில் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குமாங்குடி அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கட... மேலும் பார்க்க

வீரசோழன் கதவணையில் தண்ணீா் திறப்பு

சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்காக வீரசோழன் கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை கும்பகோணத்தை வந்தடைந்தது. இதனால் கும... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள... மேலும் பார்க்க

ஜூன் 24-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு இழப்பீடு: 2-ஆம் பகுதிக்கு ரூ. 19.99 கோடி விடுவிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு இழப்பீடு இரண்டாவது பகுதிக்கு முதல் கட்டமாக ரூ. 19.99 கோடி விடுவிக்கப்பட்டது என வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க