அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
வடக்கு மாங்குடியில் கோயில் குடமுழுக்கு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குமாங்குடி அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கடங்கள் புறப்பட்டு, கோயில் கோபுர கலங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், நாட்டாண்மைகள், வடக்குமாங்குடி கிராமவாசிகள் செய்தனா்.