செய்திகள் :

பரந்தூர் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல்!

post image

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு புதன்கிழமை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு கடந்த 31.10.2023 ஆம் தேதி நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டிருந்தது.

இந்த நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி நில உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அரசும் கையகபடுத்தப்படும் நிலங்களுக்கு நில மதிப்பினை உயர்த்தி நில நிர்ணயம் செய்து தொகை வழங்கப்படும் என கடந்த 25.6.2025 ஆம் தேதி அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அவரவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையில் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டு, தங்களது நில எடுப்புக்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில் 17.52 ஏக்கர் பரப்புக்கு ரூ. 9.22 கோடி மதிப்பு கொண்ட நிலத்தினை 19 நில உரிமையாளர்கள், விமான கட்டுமான நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தனர்.

Compensation was paid to 19 landowners who had given land for the construction of the Paranthur Airport on Wednesday.

இதையும் படிக்க : தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

காஞ்சிபுரம் அருகே மறுநடவு செய்து துளிர்த்து வந்த அரச மரத்துக்கு தீ வைப்பு!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் மறு நடவு செய்யப்பட்டு, துளிர்த்துவந்த அரச மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அ... மேலும் பார்க்க

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் பணியை கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க

உள்ளாட்சியில் ஊழல்; திமுகவினரைக் காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி! - இபிஎஸ் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கு ந... மேலும் பார்க்க

பணி நேரத்தில் தூங்கியதால்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை நீக்கம்!

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர் பணியின்போது, நள்ளிரவில் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் அருகே... மேலும் பார்க்க

துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா

துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவில் இருந்து வெளியேற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்று துணை பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றம்சாட்டியிருக்கிறார்.முன்னதாக, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை!

கடலூா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பா், ரயில் ஓட்டுநா்கள் உள்ளிட்ட 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகின்றன.கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே தண்டவாளத்தை செவ்வாய்... மேலும் பார்க்க