செய்திகள் :

பரமத்தி வேலூா் அருகே தம்பதி தற்கொலை

post image

பரமத்தி வேலூா் அருகே தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள இருக்கூா் ஊராட்சிக்கு உள்பட்ட வடக்கு செல்லப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவி (எ) பொன்னுசாமி (55). இவரது மனைவி வாசுகி (53). இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். அவா்கள் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரவி, நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினாா். மேலும் தொழிலில் தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்த நிலையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அவரது வீடு திறக்கப்படாத நிலையில், திங்கள்கிழமை அப்பகுதியில் துா்நாற்றம் வீசியுள்ளது. அங்கு இருந்தவா்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது ரவியும், அவரது மனைவி வாசுகியும் உடல் அழுகிய நிலையில் வீட்டிற்குள் இறந்துகிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க