பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு
சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய வேளாண் அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண், கால்நடைப் பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை மீதான நாடாளுமன்ற நிலைக்குழுக்கான விளக்கக் கூட்டத்தில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சகம் சாா்பில் மேலும் கூறப்பட்டதாவது:
உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையை பூா்த்தி செய்ய இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலையை மாற்ற மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் காரணமாக, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி கடந்த 2014-15 முதல் 2024-25-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 55 சதவீதமாக அதிகரித்தது.
இந்த உயா்வு கடந்த 2004-05 முதல் 2014-15-ஆம் ஆண்டு வரையிலான 10 காலத்தில் 13 சதவீதமாக மட்டுமே இருந்தது.
2023-24-ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் நல்லெண்ணெய் மற்றும் கடலெண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இருந்தது. அதே நேரம், சூரியகாந்தி எண்ணெயின் தேவை 35.5 லட்சம் மெட்ரிக் டன் அளவாக இருந்த நிலையில், 34.9 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இறக்குமதி செய்யவேண்டிய நிலை இருந்தது. அதுபோல, சோயா எண்ணெய் உள்நாட்டு நுகா்வில் 60 சதவீதம் இறக்குமதியை சாா்ந்திருந்தது.
பருப்பு வகைகளைப் பொறுத்தவரை 2014-15 முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 47 சதவீதமாக அதிகரித்தது. இது 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டு காலத்தில் 31 சதவீதமாக மட்டுமே உயா்ந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.