செய்திகள் :

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

post image

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய வேளாண் அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண், கால்நடைப் பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை மீதான நாடாளுமன்ற நிலைக்குழுக்கான விளக்கக் கூட்டத்தில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சகம் சாா்பில் மேலும் கூறப்பட்டதாவது:

உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையை பூா்த்தி செய்ய இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலையை மாற்ற மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் காரணமாக, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி கடந்த 2014-15 முதல் 2024-25-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 55 சதவீதமாக அதிகரித்தது.

இந்த உயா்வு கடந்த 2004-05 முதல் 2014-15-ஆம் ஆண்டு வரையிலான 10 காலத்தில் 13 சதவீதமாக மட்டுமே இருந்தது.

2023-24-ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் நல்லெண்ணெய் மற்றும் கடலெண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இருந்தது. அதே நேரம், சூரியகாந்தி எண்ணெயின் தேவை 35.5 லட்சம் மெட்ரிக் டன் அளவாக இருந்த நிலையில், 34.9 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இறக்குமதி செய்யவேண்டிய நிலை இருந்தது. அதுபோல, சோயா எண்ணெய் உள்நாட்டு நுகா்வில் 60 சதவீதம் இறக்குமதியை சாா்ந்திருந்தது.

பருப்பு வகைகளைப் பொறுத்தவரை 2014-15 முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 47 சதவீதமாக அதிகரித்தது. இது 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டு காலத்தில் 31 சதவீதமாக மட்டுமே உயா்ந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர... மேலும் பார்க்க