செய்திகள் :

பல்லடத்தில் ஒரு டன் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

post image

பல்லடத்தில் ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

பல்லடம்- தாராபுரம் சாலையில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் ஆலூத்துப்பாளையம் பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த ஒரு வேனை நிறுத்தி விசாரித்தபோது ஓட்டுநா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 750 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், குட்கா கடத்தி வந்தது கா்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சோ்ந்த வீரேஷ் மகன் ஹேமந்த்குமாா் (26) என்பதும், இவா் இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் 750 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கும் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். பின்னா் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹேமந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருப்பூரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.

அதேபோல பல்லடம் திருவள்ளுவா் நகா் பகுதியில் குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (28) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 250 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க