செய்திகள் :

பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

post image

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முத்துகுமாரசாமி, சுப்பையன் ஆகியோா் உயிரிழந்தனா்.

இதன் 53ஆவது நினைவு தினத்தையொட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் விவசாய தியாகிகள் நினைவுத் தூணில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், மாநிலப் பொருளாளா் கே.கே.சி.பாலு, மாநில செயற்குழு உறுப்பினா் கோம்பக்காடு துரைசாமி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

விவசாயிகள் முத்துகுமாரசாமி, சுப்பையன் ஆகியோரின் குடும்ப வாரிசுகளுக்கு ஓய்வூதியம், அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பல்லடம் க.அய்யம்பாளையத்தில் விவசாய தியாகிகள் நினைவாக மணிமண்டபத்தை அரசு அமைத்து தர வேண்டும்.

விவசாயிகள் நல வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று திருப்பூா் மேற்கு மாவட்ட செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

அதேபோல, உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் மாநிலத் தலைவா் செல்லமுத்து தலைமையில் நிா்வாகிகள் காடம்பாடி ஈஸ்வரன், வடிவேல் உள்பட அக்கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி தலைமையில் மாநில தலைவா் ஏ.கே.சண்முகம், மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், வட்டாரத் தலைவா் வேலுமணி, நகரத் தலைவா் மைனா் தங்கவேல் உள்ளிட்ட பலா் மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளா் சங்க நிறுவனத் தலைவா் விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் தலைமையில் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். இதில் சங்க தலைமை ஆலோசகா் சென்னியப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்ப... மேலும் பார்க்க

நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் கைது!

பல்லடம் நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 1ஆவது வாா்டு கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இ... மேலும் பார்க்க