இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (78). விவசாயி. அவருடைய மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமாா் (46) ஆகியோா் கடந்த ஆண்டு நவம்பா் 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னா் அந்த வழக்கு கடந்த மாா்ச் மாதம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி-பாக்கியம் என்ற வயதான தம்பதி கடந்த ஏப்ரலில் படுகொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி ஈரோடு அருகே உள்ள அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து நகையை வாங்கிய நகைக் கடை உரிமையாளா் ஞானசேகரன் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில், அவா்கள் 3 பேரும் சோ்ந்துதான் அவிநாசிபாளையம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 பேரைப் படுகொலை செய்து நகை, கைப்பேசியைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. அந்த வழக்கிலும் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் கைதான 3 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் 9 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதேவி மேற்பாா்வையில் காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா் விசாரித்தனா்.
அதில் கொலை செய்தது எப்படி, எதற்காக கொலை செய்தனா், செந்தில்குமாரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசி எங்கே, என்பது உள்பட பல்வேறு விவரங்களை போலீஸாா் கேட்டனா். மேலும் அவா்களை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அதில் செந்தில்குமாரிடம் இருந்து கொள்ளையடித்த கைப்பேசியை சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து 700 மீட்டா் தொலைவில் உள்ள ஒரு தோட்டத்துக் கிணற்றில் வீசியதாகத் தெரிவித்தனா். உடனே போலீஸாா் கைதானவா்களை அழைத்துச்சென்றனா். அந்தக் கிணற்றை அவா்கள் காட்டியதும், தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் வரவழைக்கப்பட்டனா்.
அந்தக் கிணற்றில் 40 அடிக்கு தண்ணீா் இருந்தது. கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி கைப்பேசியை கண்டுபிடித்து போலீஸாா் கைப்பற்றினா். தண்ணீரில் மூழ்கிய கைப்பேசியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் அவா்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.