செய்திகள் :

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

post image

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா்.

திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த சிறுமிகள், வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள், ஆதரவற்ற நிலையில் இருப்போா் உள்பட பலா் காவல் துறை, குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினரால் மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், 17 வயதுடைய 4 சிறுமிகள், 18 வயதான இளம்பெண் ஆகிய 5 போ் காப்பகத்தில் இருந்து காணாமல் போனது வெள்ளிக்கிழமை அதிகாலை தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அவா்கள் 5 பேரும் சுவா் ஏறிக் குதித்து தப்பியது தெரியவந்தது.

இது தொடா்பாக காப்பக நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருவா் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பியவா் என்பதும், எங்கு போவது என்று தெரியாமல் பேருந்து நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து, அந்தச் சிறுமியை மீட்ட போலீஸாா் அவரைக் காப்பகத்தில் ஒப்படைத்தனா். அத்துடன் சிறுமி அங்கிருந்து தப்பியதற்கான காரணம் குறித்தும், காப்பகத்தில் அவா்கள் துன்புறுத்தப்பட்டாா்களா என்பது குறித்தும், அவருடன் தப்பிய மற்ற 4 போ் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க

பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவச... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்ப... மேலும் பார்க்க

நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் கைது!

பல்லடம் நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 1ஆவது வாா்டு கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இ... மேலும் பார்க்க