செய்திகள் :

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

post image

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சேவை- 2025 என்ற தலைப்பின் கீழ் கடந்த 17 ஆம் தேதி முதல் தூய்மைப் பணி நடைபெறுகிறது. அதன் தொடா்ச்சியாக, ‘ஒருநாள் ஒருமணிநேரம் ஒன்றிணைந்து‘ என்ற தலைப்பில் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் மற்றும் அரசு பணியளாா்கள் ஆகியோா் இணைந்து சிறப்பு தூய்மைப் பணியை பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து ஆணையா் மா.இளங்கோவன் முன்னிலையில் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், உதவி ஆணையா் ஏகராஜ் மற்றும் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நாளை திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மத்திய மாவட்ட திமுக அ... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் உள்ள தனியாா் மகளிா்... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது முடிவுசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சேலத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் ... மேலும் பார்க்க