செய்திகள் :

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!

post image

சென்னை: பள்ளிகளில் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு இன்று தமிழக அரசிடம் அளித்த அறிக்கையில், இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த இதுபோன்ற கோச்சிங் சென்டர்கள் செயல்படுவதாகவும் அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று சமர்ப்பித்த அறிக்கையில், பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் கோச்சிங் சென்டர்களை தடை செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளில் இவ்வாறு நடத்தப்படும் கோச்சிங் சென்டர்கள், பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமலேயே, அல்லது பாடங்களை நடத்தாமலேயே, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு மட்டும் தயார் செய்வதாக் கல்விக் கொள்கை வரையறைக் குழு தெரிவித்துள்ளது.

தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?

தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் முதியோர்... மேலும் பார்க்க

கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற... மேலும் பார்க்க

மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி நிலையமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

சேலம்: 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்ட, மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி மையமா என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.சேலம் வந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை, ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த வாரம் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த வாரம் கனமழை பெய்யும் மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சு... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விலை உயர்வு! - முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சேலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர்... மேலும் பார்க்க

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம், பிரபு நகரைச் சேர்ந்த நீலாவதி (60) என்பவர் பீளமேடு, தண்ணீர்ப் பந்தல... மேலும் பார்க்க