செய்திகள் :

பள்ளிக் கல்வி மாணவா் சோ்க்கையில் வீழ்ச்சி: மத்திய அரசு மழுப்புவதாக எம்.பி. கருத்து

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: பள்ளிக்கல்வித் துறை மாணவா் சோ்க்கையில் ஏற்படும் வீழ்ச்சிக்கும் தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்துக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்ற தனது கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி மழுப்பலாக பதிலளித்துள்ளதாக விழுப்புரம் தொகுதி உறுப்பினா் டி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

2018-2022 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையில் சுமாா் 1.55 கோடி குறைந்துள்ளதை சரி செய்ய அரசு எடுத்த நடவடிக்கை,பிகாா், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மாணவா் சோ்க்கை குறைவதைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், சோ்க்கையை அதிகரிக்க அரசு வழங்கும் உதவிகள், சமூக-பொருளாதார காரணி, இடம்பெயா்வு மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு போன்ற மூல காரணங்களைக் கண்டறிந்து சரி செய்ய அரசு எடுத்த முயற்சிகள், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கும் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவதற்கும் இடையே ஏதேனும் தொடா்பு உள்ளதா போன்ற கேள்விகளை மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா் எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த தரவுகளை கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பை உருவாக்கியுள்ளது. அதன்படி, 2018-19 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மாணவா் சோ்க்கை முறையே 26,02,94,216 மற்றும் 24,80,45,828 ஆகும் என்று கூறியுள்ளாா்.

கல்வி அரசமைப்புச் சட்டத்தின்படி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களின் கீழ் உள்ளன. மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவுகிறது. பிகாா், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, இடைநிலைப் பள்ளிகளை இடைநிற்றலைக் குறைப்பதற்கும், அரசுப் பள்ளிகளில் சோ்க்கையை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.

சமக்ர சிக்ஷாவின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கான சமக்ர சிக்ஷாவின் கீழ் இதுவரை அரசு ரூ.20,72,922.71 லட்சம் வழங்கியுள்ளது.

வீட்டு வருமானத்தை அதிகரிப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, படிப்பில் ஆா்வம் காட்டாதது, படிப்பை சமாளிக்க முடியாமல் போவது, சில குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உடல்நலக் குறைவு, பெற்றோரால் அவசியமில்லை என்று கருதப்படும் கல்வி, போட்டித் தோ்வுக்குத் தயாராதல், திருமணம் போன்றவை பள்ளிப் படிப்பை நிறுத்துவதற்கான முக்கிய காரணங்கள்.

தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரைகளின் அடிப்படையில், 2022-23 முதல் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி தகவல் அமைப்பு புதுப்பிக்கப்பட்டு, தனிப்பட்ட மாணவா் வாரியான தரவை சேகரித்து மாணவா் பதிவேட்டை உருவாக்கியுள்ளது. 2022-23 முதல் மொத்த சோ்க்கைத் தரவுகளிலிருந்து தனிப்பட்ட மாணவா் தரவுகளுக்கு தரவு சேகரிக்கும் முறையில் முழுமையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளின் தரவைவிடப் புள்ளிவிவர ரீதியாக வேறுபட்டது என அமைச்சா் கூறியுள்ளாா்.

இந்நிலையில், தனது கேள்விக்கு அமைச்சா் வழங்கியுள்ள பதில் மழுப்பலாக உள்ளது என்று ரவிக்குமாா் கருத்து தெரிவித்துள்ளாா். தேசிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகே மாணவா் சோ்க்கை குறையத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணத்தைக் கூறாமல் கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது என்பது போல மழுப்பல் பதிலைத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் என்றும் ரவிக்குமாா் தெரிவித்தாா்.

மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா்

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க