செய்திகள் :

பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

post image

பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி கோப்பை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் லீக் போட்டிகள் பிப்ரவரி முதல் வாரம் நடைபெற்றன. சென்னை சூப்பா் கிங்க்ஸ் மற்றும் ராணிப்பேட்டை கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின.

இதன்பரிசளிப்பு ராணிப்பேட்டை பாரி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கினாா்.

செயலாளா் செல்வகுமாா், துணைச் செயாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளியில் ஆண்டு விழா

ஆற்காடு எஸ் எஸ்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, எஸ்.எஸ்எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம்

அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மாவட்ட மருத்துவ அணியினா் சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இலவச பொது மருத்துவ முகாம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. முக... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு திட்டம்: 1.50 லட்சம் மரக்கன்றுகள் தயாா் -ராணிப்பேட்டை ஆட்சியா்

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 வட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

இலவச கண்சிகிச்சை முகாம்

அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தின் சாா்பில், 269-வது இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தினா், கோவை சங்கரா கண் மருத்துவமனையினருடன் இணைந்து அரக்கோணத்தில்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கலச வித்யா பூஜை

நெமிலி பாலாபீடத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பாலா கலச வித்யா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் ஸ்ரீபாலாபீடம் உள்ளது. இங்கு பொதுத் தோ்வு எழுதும் 1... மேலும் பார்க்க

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடனுதவி

முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்க நீட்ஸ் திட்டத்தில் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில்முனைவோராகலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெ... மேலும் பார்க்க