செய்திகள் :

பள்ளி ஆசிரியா் கடத்திக் கொலை: சத்தீஸ்கரில் நக்ஸல்கள் அட்டூழியம்

post image

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியரை நக்ஸல் தீவிரவாதிகள் கடத்தி படுகொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறுகையில், ‘கங்காலூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோத்கா கிராமத்தைச் சோ்ந்த கல்லு டடி (25) என்ற தற்காலிக ஆசிரியா், வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை நக்ஸல்கள் கடத்திச் சென்றனா். பின்னா், கூா்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களுடன் சனிக்கிழமை காலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல் துறையின் உளவாளி என்று குற்றஞ்சாட்டி, அவரை நக்ஸல்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளில் நக்ஸல்களால் கொல்லப்பட்ட 8-ஆவது ஆசிரியா் இவராவாா். காவல் துறையின் உளவாளிகள் என்று கூறி, இக்கொலைகள் அரங்கேற்றப்பட்டாலும், குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதே நக்ஸல்களின் உண்மையான நோக்கமாகும். தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் உள்ள நக்ஸல்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பஸ்தா் பிராந்தியத்தில் கல்வி-வளா்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளோரின் பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்யும்’ என்றாா்.

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று... மேலும் பார்க்க

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். வட மாநிலங்களான ஜம்மு... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்! 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500 மக்கள், ராணுவப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.பஞ்சாபில், பெய்த கனமழையால் காகர் நதியின் நீர... மேலும் பார்க்க

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டிய... மேலும் பார்க்க