திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு
பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் 200 மாணவா்கள் பங்கேற்றனா்.
பள்ளி மாணவா்கள் இடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவ திறன்கள் மற்றும் பொதுச் சொற்பொழிவு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிஐஐ யங் இந்தியன்ஸ் ஈரோடு கிளை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் நாடாளுமன்ற உறுப்பினா்களாக பங்கேற்றனா்.
உண்மையான நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்த விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வுக்கு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்துப் பேசினாா்.
நிறைவு நிகழ்வில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ. பிரகாஷ், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி பி.ராஜ்குமாா், கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளா் ஏ.கே.இளங்கோ ஆகியோா் விவாதத்திலும், தலைமைத்துவத்திலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களுக்கு விருதுகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி, துணை முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.