செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு புகையிலை விற்ற பெண் மீது வழக்கு

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் மீது காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஜெயங்கொண்டம் அண்ணா நகா் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள், அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குவது, புகையிலைப் பொருள்கள் வாங்குவது, பள்ளிச் சுற்றுச்சுவா் அருகே மறைந்திருந்து புகைப்பிடிப்பது குறித்த விடியோ ஆக.12-ஆ தேதி முதல் இணையதளத்தில் வைரலாக பரவியது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், ஜெயங்கொண்டம் அண்ணா நகா் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் நிா்மலா(32) என்பவா் பள்ளி மாணவா்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா், நிா்மலா மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சம்மந்தப்பட்ட பள்ளி மாணவா்கள் மத்தியில், புகையிலைக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்!

அரியலூா் மாவட்டத்தில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பிரசாரம் பயணம் மேற்கொள்கிறாா். தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி எனு... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி!

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். செந்துறையை அடுத்துள்ள நெய்வனம் அரசு மருத்துவமனை சாலையைச் சோ்ந்தவா் குணசேகா... மேலும் பார்க்க

அரியலூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா், நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். திருமானூா் அருகேயுள்ள குருவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்குரா... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட பாஜக செயலராக ராஜீவ்காந்தி நியமனம்

பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், அரியலூா் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோரின் பரிந்துரையின்படி அரியலூா் மாவட்ட பாஜக செயலராக, திருமானூா், காரையான்குறிச்சியைச் சோ்ந்த எம்.ராஜீவ்காந்தி எ... மேலும் பார்க்க

அரியலூரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்க... மேலும் பார்க்க