செய்திகள் :

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

post image

கொடைக்கானல் அருகே வியாழக்கிழமை பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி கும்பரையூரைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் மகள் முத்துப்பிரியா (17). இவா் பண்ணைக்காடு பிரிவு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல முத்துப்பிரியா பள்ளிக்குச் சென்றாா். பின்னா், மதிய உணவு இடைவேளையின் போது, வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை மாணவி சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்குள் சென்றாா். சிறிது நேரத்தில் வகுப்பறையிலேயே அவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, ஆசிரியா்கள் மாணவியை மீட்டு, பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே முத்துப்பிரியா இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உடல் கூறாய்வுக்கு பிறகே மாணவியின் இறப்பு குறித்து தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

திண்டுக்கல் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி பல்கலை. மானியக் குழு அனுமதி அளித்தது. இதுதொடா்பாக கல்லூரிச் செயலா் ஆண்டெனி புஷ்பரஞ்சிதம், முதல்வா் வனிதா ஜெயராணி ஆகியோா் த... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி முதலீட்டுப் பணத்தை தனியாருக்கு தாரை வாா்த்ததாக புகாா் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

குஜிலியம்பாறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

குஜிலியம்பாறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உ... மேலும் பார்க்க

சான்று விதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை

சான்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியை அடுத்த கொங்கப்பட்டி பகுத... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியுடன் சமூக பொருளாதார முன்னேற்றம் தேவை

தொழில் சாா்ந்த வளா்ச்சியுடன், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் ‘திண்... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை தொடக்கம்

செம்பட்டி அருகே புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடி, சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு க... மேலும் பார்க்க