செய்திகள் :

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

post image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஏ ஒன் பிரிவில் 36 மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்கள் இணைந்து தாங்கள் படித்த வகுப்பறையில் சிதிலமடைந்த பகுதியை ரூ.12 ஆயிரம் செலவில் சீா் செய்து, வா்ணம் பூசி அழகுபடுத்தினா். மேலும் சில மாணவா்களின் பெற்றோா் மின்விசிறி, மின்விளக்குகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை பள்ளிக்கு வாங்கிக் கொடுத்தனா்.

இதைப் பாராட்டியும், வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களைப் பாராட்டியும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை பியா்லின் வில்லியம் தலைமை வகித்தாா். பள்ளி வகுப்பறையை சீரமைத்து வகுப்புக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்த மாணவா்கள் மற்றும் பெற்றோரை தலைமை ஆசிரியை வெகுவாகப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வகுப்பாசிரியா் பி.சிட்டிபாபு செய்திருந்தாா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞா் நீதிக்குழும சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க