சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!
பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
ஜேடா்பாளையம் அருகே பள்ளி வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னுசாமி (55), கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை சொந்த வேலையாக ஜேடா்பாளையம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சோழசிராமணிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். கொத்தமங்கலம் தபால் நிலையம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற தனியாா் பள்ளிப் பேருந்தை முந்திச் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் சின்னுசாமி படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடா்பாளையம் காவல் துறையினா், சின்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.